PUBLISHED ON : செப் 12, 2020

அ நிறம் | அளவு
என் வயது, 70; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வரும், பல லட்சம் வாசகர்களில் ஒருவன். பெரியோருக்கும் ஏதுவாக, உயரிய தத்துவம் போதிக்கும் சிறுகதைகளை, தொடர்ந்து வெளியிடுவது மகிழ்ச்சி தருகிறது.
சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை சேகரித்து, என் பேரக் குழந்தைகளுக்கு கூறிவருகிறேன். ஆவலுடன் கேட்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், ரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியமாக உணர்ந்து மகிழ்கிறேன்.
'உங்கள் பக்கள்' பகுதி ஓவியங்களைப் பார்த்து, நுட்பமாக வரைகின்றனர், பேரக் குழந்தைகள். இதனால், 'டிவி' தொடர் பார்த்தல், அலைபேசி உபயோகித்தல் போன்ற தீங்குகள் அண்டவில்லை. விலகியிருக்க முடிகிறது.
கூட்டுக் குடும்ப சூழலை உருவாக்கும், சிறுவர்மலர் இதழால் மகிழ்ச்சி மலர்கிறது.
- எஸ்.திருநாவுக்கரசு, சென்னை.
தொடர்புக்கு: 76393 52842
