PUBLISHED ON : ஏப் 24, 2021

என் வயது, 80; தனியார் நிறுவனத்தில் பணிசெய்து ஓய்வு பெற்றேன். கடந்த, 11 ஆண்டுகளாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். எங்கள் தெருவின் கடைக்கோடி வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள் கூடுவர். அதை, 'சிறுவர் சங்கம்' என அழைப்பர்.
வாரந்தோறும் விளையாட்டுப் போட்டிகள், பாட்டு, பேச்சு என அரங்கேறும். பொருளாதார வசதி இல்லாததால் பழைய இதழ்களை வாங்கிப் படிப்பர். அந்த சங்கத்திற்கு, சிறுவர்மலர் இதழை கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அதன்படி, படித்து முடித்ததும், சங்கத்திற்கு கொடுத்து விடுகிறேன்.
அதன் சுவையில் சொக்கிப் போயினர் சிறுவர்கள்; சங்கப் பெயரை, 'சிறுவர்மலர் சங்கம்' என்றே மாற்றி விட்டனர். எனக்கும் அன்பான பட்டப் பெயராக, 'சிறுவர்மலர் தாத்தா' என சூட்டியுள்ளனர். இது மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது!
- ஜி.ராஜா, விருதுநகர்.
தொடர்புக்கு: 90477 15160
