
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 72; ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சந்திரனை கண்டதும் அல்லி மலரும். சூரியனை கண்டதும் தாமரை மலரும். சனிக்கிழமை வந்தால் சிறுவர்மலர் இதழ் மலரும். அதைப் பார்த்ததும், பெரியோர் முதல் சிறியோர் வரை, அனைவர் உள்ளங்களும் மகிழும்.
சிறுவர், சிறுமியர் உற்சாகத்தை துாண்டும்படி, ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர், 'உங்கள் பக்கம்' பகுதி வண்ணமயமாக உள்ளது. அது போல், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் நினைவுகள் பெருமிதமாக மலர்கின்றன.
இன்னும் பல அற்புதங்களுடன் வெற்றிக்கு வித்திடுகிறது, சிறுவர்மலர். வாடாமல் என்றும் மணம் பரப்பும் சிறுவர்மலர் இதழை வாழ்வில் மறக்கவே முடியாது.
- கே.ராஜேந்திரன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94428 58891

