PUBLISHED ON : மார் 07, 2026

என் வயது, 36. சென்னை, உயர்நீதிமன்றத்தில் பணிபுரிகிறேன். இப்போதும், சிறுவர்மலர் இதழை கையில் எடுக்கும் போது, என் பால்ய வயது நினைவு திரும்புகிறது. நானும், என் நண்பர்களும் நுாலகத்தில் வரிசையாக அமர்ந்து, அநேக புத்தகங்களை படிப்போம். சிறுவர்மலர் இதழை படிக்க, போட்டி போடுவோம். படக்கதை பகுதி தொடர்ச்சியாக வரும் இதழ்களில், சிறுவர்மலர் சிறப்பிடம் பிடிக்கிறது.
குழந்தை பருவத்தில், சிறுவர்மலர் ஏற்படுத்திய தாக்கத்தில் தான், படிப்பை பற்றிய உந்துதல் நிகழ்ந்தது. ஒருமுறை தலைமை ஆசிரியர், சிறுவர்மலர் புத்தகத்தை புகழ்ந்து, அதிலிருந்து கேள்வி கேட்டார். நான் பதிலளித்ததை அடுத்து, மாணவர்களை கை தட்ட சொன்னார். என் தலையில், ஒரு பெரிய கிரீடம் வைத்ததை போல் உணர்ந்தேன்.
என் மகன்களுக்கும் பழைய நினைவுகளைக் கூறி, சிறுவர்மலர் இதழை படிக்க துாண்டுகிறேன். என் மகன்களுக்கு மட்டுமல்ல, எல்லா குழந்தைகளுக்கும் எதிர்கால அறிவை, கூர்மை தீட்டி வருகிறது சிறுவர்மலர்.
- ரெ.மலையரசன், சென்னை.
தொடர்புக்கு: 97888 36470

