தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஹேங்ஓவரா? காபி குடித்தால் போதும்!

ஹேங்ஓவரா? காபி குடித்தால் போதும்!

ஹேங்ஓவரா? காபி குடித்தால் போதும்!


PUBLISHED ON : பிப் 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முந்தின நாள் இரவு பார்ட்டியின் போது, மூக்கு முட்ட குடித்து விட்டு, மறுநாள் காலை எழுந்திரிக்க முடியாமல், கடும் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? 'ஹேங்ஓவர்' எனப்படும் போதை சரியாக தெளியாத இந்த நிலையில் இருந்து தப்பிப்பது எப்படி?

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில், தாமஸ் ஜெப்பர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த நிலை குறித்து ஆராய்ச்சி செய்தனர். சில எலிகளைப் பிடித்து, அதற்கு எத்தனால் ஊசி போட்டனர். சில மணி நேரங்களில், அந்த எலிகள் தலைவலியில் அவதிப்பட்டதை உணர்ந்தனர். பின்னர் காபின் கலந்த ஊசி போட்டதும், எலிகள் சகஜ நிலைக்கு வந்தன. முழு போதை ஏற்றி கொண்டவர்களுக்கு, சூடாக ஒரு கப் காபியும், தலைவலி நிவாரணி மாத்திரையும் கொடுத்தால், அவர்கள் வலி மற்றும் ஹேங்ஓவரில் இருந்து தப்பிப்பர் என, இந்த ஆராய்ச்சியின் போது தெரிய வந்தது.— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us