PUBLISHED ON : ஆக 06, 2023

நமக்கெல்லாம் ஒரு இரவு துாங்கவில்லை என்றாலும், அடுத்த நாள் எந்த வேலையையும் சரியாக பார்க்க முடியாது. இரண்டு நாட்களுக்கு அந்த துாக்க கலக்கம் இருக்கும். ஆனால், தென் கிழக்காசிய நாடான வியட்நாமை சேர்ந்த நாகோக், 80, என்ற முதியவர், தொடர்ச்சியாக, 60 ஆண்டுகள் துாங்காமல் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா...
இவருக்கு, 20 வயது இருக்கும்போது, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அந்த காய்ச்சல் குணமானதிலிருந்து, அவருக்கு துாக்கமே வரவில்லை. மாத்திரை, மருந்து சாப்பிட்டும் பலன் இல்லை.
வலுக்கட்டாயமாக பல மணி நேரம் படுக்கையில் கண் மூடி படுத்திருந்தும் துாக்கம் வரவில்லை. ஆனால், இந்த துாக்கமின்மை காரணமாக, தனக்கு சோர்வோ, எந்தவிதமான நோய் பாதிப்போ ஏற்படவில்லை என்கிறார், இவர். நாகோக்கின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் இது, இன்று வரை ஆச்சரியமான விஷயமாகத்தான் உள்ளது.
—ஜோல்னாபையன்
