sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச் சோலை!

/

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!

கவிதைச் சோலை!


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உறவெனும் ஒரு கை ஓசை!

உறவென்னும் பந்தம்

நம்மை இணைப்பதாக

இறுமாந்திருக்கும் மாந்தரே...

கருவின் மூலம் வரும் உறவை

தொப்புள் கொடியை

அறுப்பது போல் அறுத்து

செல்லும் பிள்ளைகளா

நம் உறவு?

பணமிருந்தால் வட்டமிட்டு

கஷ்டத்தில் கணப்பொழுதில்

மறையும் சுற்றமோ

நம் உறவு?

பதவியில் இருக்கையில்

பதிவிசாக சாமரம் வீசி

பலவும் சாதித்து

பின் பார்த்தும் பார்க்காமல்

மறையும் மனிதரோ

நம் உறவு?

கூடிக் குடித்து கும்மாளமிட்டு

குதூகலித்து பின்

காலப்போக்கில் மறையும்

நண்பர்களோ நம் உறவு?

அவன் அடிபட்டால்

எனக்கு வலிக்க வேண்டும்

அவன் துன்பத்தில்

என் கண்கள் கலங்க வேண்டும்

அவன் சிரித்தால் நான்

மலர வேண்டும்

அவன் பேசாவிடிலும் நான்

அவனை நினைக்க வேண்டும்

கண்ணால் பார்க்காத போதும்

காதில் கேட்காத போதும்

கட்டித் தழுவாத போதும்

காத தூரத்தில் இருந்தபோதும்

எத்தனை காலமானலும்

யாரை நினைத்தால் மனம்

மலர்கிறதோ, மகிழ்கிறதோ

அதுதான் நம் உறவு!

அது எங்கிருந்தாலும்

உறவாக உணராவிட்டாலும்

அது ஒரு வகையில்

ஒரு கை ஓசையே!

ஜி.சுவாமிநாதன்,

சென்னை.






      Dinamalar
      Follow us