தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பொய் வழக்கு ஜோடித்த போலீஸ் அதிகாரி!

பொய் வழக்கு ஜோடித்த போலீஸ் அதிகாரி!

பொய் வழக்கு ஜோடித்த போலீஸ் அதிகாரி!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, நம்பி நாராயணன். ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கடத்த சதி நடந்ததாக கூறி, தவறு செய்யாமலேயே சிறையில் அடைக்கப்பட்டார். கேரள போலீசாரால் குற்றவாளி ஆக்கப்பட்ட இவர், நிரபராதி என்று அறிய நீதிமன்றத்துக்கு, 24 ஆண்டுகள் தேவைப்பட்டன.

இவருக்கு, 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, கேரள அரசுக்கு உத்தரவு போட்டது, உச்ச நீதிமன்றம். 'காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட தவறுக்கு, இன்றைய கம்யூ., அரசு ஏன் அபராத தொகை வழங்க வேண்டும்...' என்ற பேச்சு எழுந்தபோதும், உடனடியாக நஷ்டஈடு வழங்கியது இன்றைய அரசு.

'உளவாளி வழக்கு' எப்படி உருவானது...

விசா காலாவதியான இரு மாலத்தீவு பெண்கள், கேரள உயர் போலீஸ் அதிகாரியை சந்தித்தனர். இந்த பெண்களில் ஒருவரின் வயது: 25, அழகாக இருந்தார். அவர் மீது, காக்கிக்கு ஆசை வந்து விட்டது. அப்பெண் மறுத்ததால், அந்த பெண்களை பொய் வழக்கு தொடர்ந்து சிக்க வைத்தான்.

அப்போது, கேரளாவில், ஆளும், காங்., கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் இருந்தது. போலீஸ் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு, விஞ்ஞானி ஒருவர் நண்பராக இருந்தார் என்ற விஷயம் தெரிந்தது. இதையடுத்து காக்கி, மாலத்தீவு அழகியை, விஞ்ஞானியுடன் இணைத்து, வழக்கு போட்டான். நரைத்த தாடி, தலைமுடியுடன் விஞ்ஞானி ஒருவரும், ஓட்டலுக்கு வந்ததாக புகார் கிடைக்க, வெள்ளை தாடி உள்ள, நம்பி நாராயணனை கைது செய்தனர்.

இது எப்படி இருக்கு?

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us