sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 11, 2015

Google News

PUBLISHED ON : அக் 11, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.சிதம்பரம், கடலூர்: சிலர், நம்மிடம் நேரம் போவது தெரியாமல் பேசுகின்றனரே... அவர்களை, 'அவாய்டு' பண்ண, ஒரு உபாயம் தாருங்களேன்...

நைசாக கத்திரிக்கோல் போடணுமா? லேனா தமிழ்வாணன் வழியை கடைபிடியுங்கள். தன் அலுவலக மேஜையில், 'எனக்கு அதிக வேலை உள்ளது' என, எழுதி வைத்துள்ளாராம்!

எஸ்.அமிர்தலிங்கம், சென்னை: பத்திரிகை ஆசிரியரிடம் கேட்கக் கூடாத கேள்வி எது?

உங்க பத்திரிகை சர்க்குலேஷன் எவ்வளவு?

பி.இனியன், ராக்கியாபாளையம்: வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் அரசா, இளைஞர்களா?

'நம்மால் முடியும் தம்பி, நம்பு' என, விவரம் தெரிந்தவர்கள் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்காத இளைஞர்கள் தான் காரணம்!

ஏ.மரியஅருள், காளப்பட்டி: நான் இன்னும் பேயைப் பார்த்ததில்லை; என்றாவது பேயை பார்க்க முடியுமா?

அனுபவப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவரின் பதில் இதோ... 'ஆசாமிக்கு இன்னும் கல்யாணமாகல போல இருக்கு!'

ஜி.கவுசல்யா, முகலிவாக்கம்: பெண்கள் கூந்தலை முன்னே போட்டுக் கொள்வது, முதுகு அழகை காட்டவா, முடி அழகை காண்பிக்கவா?

முன்னே போடும் அளவுக்கு இக்கால பெண்களுக்கு கூந்தல் எங்கே இருக்கு!

கே.முகைதீன் பாவா, மாங்கரை: இலக்கியவாதி என்று அறிய தேவையான ஆதாரம் என்ன?

தாடி வைத்து, காவி நிற ஜிப்பா அணிந்து, அழுக்கான ஜீன்ஸ் பேன்ட் போட்டு, தோளில், ஜோல்னா பை தொங்கவிட்டு, கலைந்த தலை முடியுடன் கண்ணாடி ஒன்றும் போட்டு இருக்க வேண்டும்!

சொ.முத்துவிஜயன், நியூசித்தாபுதூர்: 'பத்து ஆண்டுகளுக்கு, ஜனநாயகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சாட்டையை கையில் தூக்கினால், மக்கள் திருந்துவர்...' என, கவியரசு கண்ணதாசன் கூறினாரே... சாத்தியமா?

'எமர்ஜன்சி' நிலையை, உதாரணமாக எடுத்துக் கொண்டு, கவிஞரின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்; விடை கிடைக்கும்!

எச்.மெய்யானம், நெய்வேலி: காதலியிடம் எதை மறைக்கலாம்; எதை மறைக்கக் கூடாது?

எதை வேண்டுமானாலும் மறையும்; மறைத்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளும்!






      Dinamalar
      Follow us