sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 12, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எஸ். ஜெய்கணேஷ், திண்டுக்கல்:'கொரோனா'வுக்கு மருந்து கண்டுபிடிப்பது சாத்தியமா?

நம் முன்னோர் கண்டுபிடித்த, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறதே! கஷாயம், மாத்திரைகள் மூலம் ஆறே நாளில் விரட்டி அடித்து விடுகின்றனராம்!

சில பணக்காரர்கள் மட்டும், 'மொத்தமே, 1,500 - 1,600 ரூபாய் தான் வாங்குகிறீர்கள்... உங்கள் மருத்துவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை...' என, 'டிஸ்சார்ஜ்' ஆகி சென்று விடுகின்றனராம்!

நவநீலராய், சென்னை: டிபன் சாப்பிட்ட பின், காபி சாப்பிடுவது - காபி சாப்பிட்ட பின், டிபன் சாப்பிடுவது... எது சுவையானது?

என் அனுபவத்தில் இரண்டுமே சுவையானது அல்ல... தோசை, 'ஆர்டர்' செய்யும்போதே, காபியும் எடுத்து வரச்சொல்ல வேண்டும். தோசை ஒரு வாய் போட்டு, காபி ஒரு மடக்கு சாப்பிடுவது, சுவையாக இருக்கும்!

* வே. உமா, விழுப்புரம்: பத்தாம் வகுப்பிற்கு, 'ஆல் பாஸ்' போட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

வேறு வழி என்ன சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில்; அரசின் முடிவு சரி தான் என, நினைக்கிறேன்!

மனோகர், கோவை: 'கொரோனா ஒழியும் நாள், கடவுளுக்குத் தான் தெரியும்' என்று, முதல்வர் இ.பி.எஸ்., கூறுகிறாரே... அதன் அர்த்தம் என்ன?

கடவுள் எதிர்ப்பு இயக்கமான, தி.க., வீரமணியின், 'சைடு' அவர் இல்லை என்பதை, மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்!

கே.ஆர். ரவீந்திரன், சென்னை: கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள், வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

'சம்பாதித்த' பணம், அவர்கள் குடும்பத்துடனேயே இருக்க வேண்டும் என்பதால் தான்!

ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை: ஜாதக பொருத்தம் பார்க்காமல் அல்லது பொருத்தம் இல்லாமல் இருந்தால், திருமணம் பண்ணலாமா?

எனக்கு தெரிந்த முதியவர் ஒருவர், தன், 90வது வயதில், சமீபத்தில் இறந்தார்; பிராமணர். மனைவியின் ஜாதகத்தை வாங்கி, தன் ஜாதகத்தை அதற்கு ஏற்றார் போல் மாற்றி, திருமணம் செய்து கொண்டார்.

ஐந்து மகன்கள், இரண்டு பெண்களை பெற்றெடுத்தார், அவர் மனைவி. இவர்கள் அனைவருக்கும், அதே பாணியை பின்பற்றினார். எள்ளு பேரனை பார்த்த பின்பே இறந்தார்.

ஜாதகம் தேவையா..






      Dinamalar
      Follow us