sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 04, 2021

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர். ஜெய்ஸ்ரீ, கோவை: இப்போது தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன?

தலைமைச் செயலகம்! அந்த கோட்டையை, 10 ஆண்டுகளாக கை விட்டவர்கள், அதைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த கோட்டையில் இருப்பவர்கள், அதைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

என்.நாராயணன், நாகர்கோவில்: நான் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்... அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கடன் கொடுக்காதீர்கள்; அதை வாங்காதீர்கள்! இதைச் செய்பவர்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை!

* முருகேசன், தஞ்சாவூர்: தான் நிற்கும் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் தான் பிரசாரம் செய்வேன் என்று, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறி விட்டாரே...

போட்டியிடும், 60 தொகுதிகளிலும், நாலாம், ஐந்தாம் இடம் தான் கிடைக்கப் போகிறது என்பது, அவருக்கு நன்றாகவே தெரியும்; அதனால், விருத்தாசலத்திலாவது வெற்றி பெற்று விடலாமே என்பதால் தான், இந்த, 'ஸ்டேட்மென்ட்!' அங்கும், அவர் வெற்றி பெற மாட்டார் என்பதே உண்மை!

ஆர். ஜெயலட்சுமி, மதுரை: இதோ, ஏப்., 6ம் தேதி வந்து விட்டது... இந்தத் தேர்தல் மூலம் அரசுக்கு வருமானம் அதிகமா? செலவு அதிகமா?

தேர்தலில் நின்று ஜெயிப்பவர்களுக்கே வருமானம் அதிகம்!

* பொன்.ராஜபாண்டி, மதுரை: 'நான் ஆட்சிக்கு வந்தால், படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும், சொந்த ஊரிலேயே அரசு வேலை தருவேன்...' என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகிறாரே...

கடந்த, 10 ஆண்டுகளாக, சினிமாவில், வாய்ப்பே கிடைக்காமல் தவித்து வருகிறார், வடிவேலு; அந்த இடத்தை, சீமான் பிடித்து விடுவார் போல் தோன்றுகிறது!

பி.என். நரசிம்ம மூர்த்தி, சென்னை: அஞ்சல் அட்டையில் உங்கள் படம் போட்டாலே, அலுவலகத்தை வந்து அடைந்து விடுகிறதே... என்ன மாயம்?

அஞ்சல் அலுவலர் அனைவரும், என் வாசகர் என்பது, இதன் மூலம் புரிகிறது!

வி. விசந்தா, நெல்லை: பகுதி நேர வேலை எது... முழு நேர வேலை எது?

சினிமாக்காரர்களுடையது பகுதி நேர வேலை; அரசியல்வாதிகளாகி, நடிப்பது அவர்களது முழு நேர வேலை!

க. ரவி, சென்னை:'தமிழகத்தின் காவல் தெய்வம்; தியாகத் தலைவி, ராஜ மாதா' என்றெல்லாம், சசிகலாவை புகழ்வது குறித்து...

எல்லாம், காந்தி படம் போட்ட நோட்டின் மீது உள்ள ஆசையில் தான்!






      Dinamalar
      Follow us