PUBLISHED ON : ஏப் 13, 2014

அ நிறம் | அளவு
ஓட்டலில், விதவிதமான சுவீட்டுகள் இருந்தாலும், முதலாளி அவற்றை எடுத்து, சாப்பிடமாட்டார். 'சாப்பிடு சாப்பிடு' என்ற ஆசை, அவரை உள்ளின்று உந்தாது. ஏனெனில், சுவீட்டுகளில், அவர் சுவீட்டை காண்பதில்லை. அது, ஒரு வியாபாரப் பொருள் என்பதை, அவர் புரிந்து கொண்டிருப்பார். அதேபோல் தான், யோகியானவன், சுகத்தில் சுகத்தையும், துன்பத்தில் துன்பத்தையும் காண்பதில்லை. அதன் உட்பொருளை அறிந்தவனாதலால், அவற்றினால் ஏற்படும் ஆசைகளுக்கு, ஆட்படுவதில்லை.
— பாக்கியம் ராமசாமி.
