PUBLISHED ON : ஏப் 03, 2022

அ நிறம் | அளவு
இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள கிராமங்கள் என்றாலே போலீசாருக்கு கதி கலக்கம் ஏற்படும். குறிப்பாக, பஸ்தர் என்ற உள் கிராமங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; இங்கு நக்சல்கள் நடமாட்டம் அதிகம்.
இங்கு வாழும் பல பழங்குடி மக்களிடம் நக்சல்கள் நட்புடன் உள்ளனர்.
அனைத்து பழங்குடி இன மக்களும் இணைந்து, 75 நாட்கள் தசரா போன்று, ஒரு பண்டிகையை கொண்டாடுகின்றனர். உலகில் நீண்ட நாட்கள் கொண்டாடும் பண்டிகை இதுவாக தான் இருக்கும்.
பண்டிகையின்போது, 'ஹல்பா' இன பழங்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் தலை மட்டும் வெளியே தெரியும் படி, மண்ணில் புதைத்து வைப்பர். அவர், தொடர்ந்து ஒன்பது நாட்கள் புதையுண்டு, மக்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும். இதை பெருமையாக கருதுகின்றனர், பழங்குடி வாலிபர்கள்.
— ஜோல்னாபையன்
