
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மோர் குழம்பு செய்யும்போது, ஊற வைத்த துவரம் பருப்பு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால், மோர் குழம்பு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்
* இஞ்சி மீந்து விட்டால், அதை துருவி, வெயிலில் காய வைத்து, மிக்சியில் பொடித்து, குருமா, பொங்கல், பொரியல் ஆகியவற்றில் சேர்த்தால், கூடுதல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்
* ஒரு டேபிள் டீஸ்பூன் தனியா, ஆறு மிளகு, இரண்டையும் வறுத்து, பொடியாக்கி, புளி காய்ச்சலை, சாதத்துடன் கிளறும்போது சேர்த்தால், புளியோதரை சுவையாக இருக்கும்.

