PUBLISHED ON : டிச 30, 2018

* புதிய வாய்ப்புகளில் புதையலெடுங்கள். புதிய இலக்குகளை முடிவு செய்யுங்கள். புதிய தொடர்புகளை பலப்படுத்துங்கள். புதிய திட்டங்களை தீட்டி வையுங்கள்.
* உழைப்பால் நேரத்தையும், சேமிப்பால் பணத்தையும், சிக்கனமாக யார் கையாளுகின்றனரோ, அவர்களே வாழ்க்கையில் சந்தோஷமாய் இருப்பர்.
* வாய்ப்பிற்காக எத்தனை படிகள் வேண்டுமானாலும் ஏறி, இறங்கு. அப்படி ஏறி இறங்கும்போது கிடைக்கும் அனுபவங்களே, நம்பிக்கை சுவடுகள்.
* மவுனமாக யோசியுங்கள். அது தான் பெரும்பாலும் மன அழுத்தத்தை குறைக்கிற உயிர் பாசனம்.
* எல்லா வார்த்தைகளும் வாக்கியங்களை அமைக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டும், வாழ்க்கையே அமைத்து விடும்!
* மனம் தளராமல் முயல்பவர்களையே வெற்றி எட்டிப் பிடிக்கிறது. இல்லை, இல்லை... கெட்டியாக பிடிக்கிறது!
* உங்கள் தோல்விக்கான காரணத்தை தேடுவதை விட, உங்கள் வெற்றிக்கான வழித்தடங்களை தேடுங்கள்!
* பகலும், இரவும் பூமியின் சுழற்சி. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் சுழற்சி. விடா முயற்சி மட்டுமே, உங்களின் வளர்ச்சி!
* லட்சியம் தெளிவாக இருந்தால், சோதனையும் ஒரு கவசம் தான். இலக்கு தெளிவாக இருந்தால், வெற்றியும் நம் கைவசம் தான்!
* செல்வத்தை இழந்தால் - எதையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் - ஏதோ சிறியதை இழந்து விட்டீர். ஆனால், குணத்தை இழந்தால் - அனைத்தையும் இழந்து விட்டீர், என்று அர்த்தம்.
* சிந்தித்து பார்க்காத முடிவு, வியர்வை சிந்தாத உழைப்பு, கவனம் இல்லாத செயல் ஆகிய மூன்றும், மனிதனின் உயர்வுக்கு தடையாக அமையக் கூடியவை.

