sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தேர்வு கால, 'டிப்ஸ்!'

தேர்வு கால, 'டிப்ஸ்!'

தேர்வு கால, 'டிப்ஸ்!'


PUBLISHED ON : பிப் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* 'இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால் தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது...' என்கின்றனர், ஜப்பான், 'பிசியலாஜிக்கல் சயின்ஸ்' நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.

* துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.

* 'தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது...' என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

* மாணவர்களே... ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும் வாரத்தில், 'போதுமான நேரம் துாங்கி எழுங்கள்...' என்கின்றனர்.

* தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அமெரிக்காவின், 'பேய்லர்' பல்கலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, 'ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

* 'உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச் சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால், அது, மூளையில், 'ஆல்பா' அலைகளை அதிகரிக்க செய்து, நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா... 'காலை உணவை தவிர்க்காதீர்... தேர்வு காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்... காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்...' என, கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

* மேலும் சில குறிப்புகள்: மேலும், 'கீரை வகைகள், 'ஒமேகா - 3' சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை மூளையை இளமையாக வைக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்

* தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி, படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து, புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்

* துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும். தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி பெற முடியும்

* அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

* தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள் என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக, அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, அடித்தல் திருத்தலின்றி எழுதவும்

* முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு தேவையான படங்கள், 'க்ராப்ட்' போன்றவற்றோடு, சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்

- கோவீ.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us