PUBLISHED ON : நவ 27, 2016

அ நிறம் | அளவு
படத்தில், தன் மகள் டோராவுடன் இருப்பவர், கேரள மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்; பல முறை நிதியமைச்சராக பதவி வகித்த இவரிடம், 'இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்வில் என்ன சம்பாதித்தீர்கள்...' என்று கேட்டால், 'நான் சம்பாதித்துள்ள சொத்து, என் புத்தகங்கள் தான்...' என்கிறார்.
ஆம்; இவருக்கு சொந்தமாக வீடு கூட இல்லை; இதுவரை, 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
பதவி கிடைத்தால், அதை வைத்து, 10பரம்பரைக்கு, சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் வாழும் நம் நாட்டில், இப்படி ஒரு அமைச்சரா என்று வியக்கும் அளவில் வாழ்ந்து வருகிறார், தாமஸ் ஐசக்.
இவரல்லவோ, உண்மையான ஜனநாயகவாதி!
— ஜோல்னா பையன்.
