PUBLISHED ON : மார் 09, 2014

சிம்பு படத்தில் அஜித் - விஜய்!
'அஜித் தான், தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்...' என்று, முழக்கமிட்டு வரும் சிம்பு, 'அஜித்தின் அடுத்த வாரிசு நான் தான்...' என்றும் மார்தட்டி வருகிறார். இந்நிலையில், தான் நடித்து வரும், வாலு படத்தில், தன்னை மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ளாமலிருக்க, ஒரு காட்சியில், அஜித் மாஸ்க்கை அணிந்து, நடித்துள்ளார் சிம்பு. அதோடு, தன் கூடவே பைக்கில் வரும் நண்பரான சந்தானத்துக்கு, விஜய் மாஸ்க் அணிவித்துள்ளார். ஆக, அஜித் - விஜய் எனும், இரண்டு மெகா நடிகர்களின் ரசிகர்களையும், தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக, இதை வைத்தே பப்ளிசிட்டியும் செய்கிறார் சிம்பு.
— சினிமா பொன்னையா
முப்பது சதவீதம் கமிஷன் தரும் அமலாபால்!
தலைவா படத்திற்கு பின், இனி, தமிழில், நாம் தான் நம்பர் ஒன் நடிகை என்று நினைத்து, தெலுங்கு படங்களை தவிர்த்து வந்தார் அமலாபால். ஆனால், தலைவா தோல்வியடைந்து, அவரது நம்பர் ஒன் கனவை கலைத்து விட்டதால், மறுபடியும், ஆந்திராவில் விட்ட இடத்தை பிடிக்க, கல்லெறிந்து வருகிறார். தற்போது சமுத்திரகனி இயக்கும், நிமிர்ந்து நில் படத்தின், தெலுங்கு பதிப்பில், நானிக்கு ஜோடியாக நடித்திருக்கும் அமலாபால், அவர் மூலமாகவும், தெலுங்கு படங்களில் நடிக்க, முயற்சி செய்கிறார். மேலும், 'மெகா தெலுங்குப் பட ஹீரோக்களின் பட வாய்ப்புகளை வாங்கித் தந்தால், வாங்கும் சம்பளத்தில், முப்பது சதவீதம் கமிஷனாக தருவதாக, சினிமா மேனேஜர்களிடம் சொல்லி வருகிறார். காரியம் ஆக வேண்டுமானால், கழுதைக் காலையும் பிடி!
— எலீசா
காமெடிக்கு மாறும் மனீஷா யாதவ்!
பட்டய கிளப்பனும் பாண்டியா படத்தில், கவர்ச்சியில், பட்டய கிளப்பியுள்ளார் மனீஷா. இருந்தபோதும், காமெடி ஏரியாவிற்குள் அவரை இழுத்திருக்கும் சூரி, விதார்த்தை கலாய்க்கும் காட்சிகளில், மனீஷாவுடன், காமெடி கூட்டணி அமைத்துள்ளார். சில காட்சிகளில் மனீஷாவின் காமெடி, 'ஒர்க் - அவுட்'டானதால், மொத்த யூனிட்டே, கைதட்டி, அவரை, உற்சாகப்படுத்தினர். அதனால், இதுவரை, அதிரடி கவர்ச்சி நாயகியாக இருந்து வந்த மனீஷா யாதவ், இனி, காமெடி கலந்த கதாநாயகி வேடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் போவதாக கூறி வருகிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குத் தகுந்த வீக்கம்!
— எலீசா
உதயநிதியின் ஆஸ்தான நாயகியான நயன்தாரா!
தமிழ் நடிகைகளில், உதயநிதியை அதிகம் கவர்ந்தவர், நயன்தாராதான். அதனால்தான், தான் ஹீரோவாக நடித்த, முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்க, முதலில் நயன்தாராவை அணுகினார். ஆனால், அப்போது, அவர் பிரபுதேவாவை திருமணம் செய்யும் மூடில் இருந்ததால் மறுத்து விட்டார். அதன் காரணமாக தான், ஹன்சிகாவை, 'புக்' செய்த உதயநிதி, இப்போது, இது கதிர்வேலன் காதல் படத்திற்கு, தன் அபிமான நடிகையான, நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கி விட்டவர், அடுத்தபடியாக, தான் நடிக்கும், நண்பேன்டா படத்திற்கும், நயனை, 'புக்' செய்துள்ளார். இப்படம் மட்டுமின்றி, இனி, தான் நடிக்கும். எல்லா படங்களிலும், நயனையே, 'புக்' செய்ய இருப்பதாக கூறும் உதயநிதி, 'அவரது கால்ஷீட் கிடைக்காதபோது மட்டுமே, வேறு நடிகைகளுடன் நடிப்போன்...' என்கிறார். மேலும், 'அந்த அளவுக்கு, நயன்தாரா ஒரு சிறந்த நடிகை என்பதோடு, என்னை, கவர்ந்த நடிகையும் கூட...' என்கிறார்.
— சி.பொ.,
காமெடியனாகும் அப்புக்குட்டி!
அழகர்சாமியின் குதிரை மற்றும் மன்னாரு படங்களில் ஹீரோவாக நடித்த அப்புக்குட்டிக்கு, அதன்பின், ஹீரோ வாய்ப்பு கிடைக்காததால், கேரக்டர் நடிகராக உருவெடுத்தார். ஆனால், அதுவும், 'ஒர்க் அவுட்' ஆகவில்லை. அதனால், இப்போது ஒரு படத்தில், தன் நடிப்புக்கு கிடைக்கும் ரெஸ்பான்சை பொறுத்து, சந்தானம், சூரி போன்று, தானும் ஒரு காமெடி டீமை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, தனக்கான காமெடிகளை எழுதி கொடுப்பதற்காக, காமெடி எழுத்தாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
பீட்சா நடிகருக்கும், ரம்மியில் அவருக்கு ஜோடியாக நடித்த அந்த ஐஸ்வர்யமான நடிகைக்கும், பத்மினி கார் படத்தில் நடித்த போது, நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அடிக்கடி சந்தித்து அன்பை பரிமாறி கொள்கின்றனர். இந்த விவகாரம் நடிகரின் மனைவிக்கு தெரியவர, நடிகைக்கு போன் செய்து, லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். நடிகை, குடும்பத்திற்குள் புகுந்து குண்டு வைத்து விட்டதால், இனி, அவருடன் இணைந்து நடிக்க, நடிகருக்கு தடை போட்டுள்ளார் மனைவி.
திமிரு, நடிகருக்கும், போடா போடி நடிகைக்குமிடையே, ஏற்கனவே, காதல் தீ பத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் பறந்தன. ஆனால், அது இப்போது இன்னும் கொழுந்து விட்டு எரிகிறது. அதனால், சமீபத்தில், நடிகர், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட போது, ஆடியன்ஸ் கூட்டத்தில் அமர்ந்தபடி, நடிகர் ரன் எடுக்கும் போதெல்லாம், 'ஐ லவ் யூ' என உரக்க சொல்லி, காதலை அம்பலப்படுத்தி விட்டார் நடிகை.
* ரம்மி, மற்றும் பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து, திருடன் போலீஸ் படத்தில் நடிக்கிறார்.
* முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள் உட்பட, பல படங்களை இயக்கிய மகேந்திரன், புதுமுகங்களை வைத்து இயக்கும் படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார்.
* போடா போடி, மற்றும் மதகஜராஜா படங்களில் நடித்த வரலட்சுமி, அடுத்து, vபாலா இயக்கும் கரகாட்டம் படத்தில் நடிக்கிறார்.
* தான் ஜோடி சேர்ந்த நடிகர்களிலே, தெலுங்கு நடிகர் ரவிதேஜா ஒரு, 'ஜென்டில்மேன்' என்று, கூறியுள்ளார் ஹன்சிகா.
