PUBLISHED ON : மே 29, 2011

அ நிறம் | அளவு
நினைவு துடிப்பு!
* உன் அன்பு நதியானால்
உயிரை கரைத்து
விடுகிறேன்!
* உன் இதயம் கடலானால்
நானே மூழ்கி விடுகிறேன்!
* என் கனவுகளை
காப்பாற்றி விடுவதற்காவது
பிரிவை பிரிந்து விடு!
* என் கற்பனைகளை
அர்ப்பணம் செய்திருப்பது
உன் காலடியில்தான்!
* ஆசை அலைகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
ஆறுதல் கரையில்!
* திரும்பவும் திரும்பிவரும்
அலையாய்...
நீ வரவே
நினைத்து வாழ்கிறேன்!
* நினைவில் ஒரு ஓரத்தில்
கேட்கும் இதயத் துடிப்பாய்...
உன் பெயரை
உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்...
உன் வரவு
காதல் வரவாகட்டும்!
— தமிழ்நாயகி, சேலம்.
