PUBLISHED ON : டிச 11, 2016

அ நிறம் | அளவு
திருவனந்தபுரத்தில், சாலை ஓரம், சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார், சுலேகா என்ற பெண். கணவனை இழந்து, தன், 24 வயது மகனும் நோயினால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில், மனம் தளராமல், மகள் தெஸ்னியை, ஐ.ஏ.எஸ்., தேர்விற்காக தயார் செய்து வருகிறார். காலை எழுந்து, தன் அம்மாவுக்கு பலகாரம் தயாரிக்க உதவி செய்த பின், படிப்பில் கவனம் செலுத்தும் தெஸ்னி, விமானப் பணிப்பெண் பயிற்சி பெற்றுள்ளதுடன், ஐ.ஏ.எஸ்., ஆவதே, தன் லட்சியம் என்கிறார்.
‑ஜோல்னா பையன்.
