sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீட்டுக் குறிப்பு!

/

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : ஏப் 12, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகம் பார்க்கும் கண்ணாடியை தேயிலையால் துடைத்தால், அழுக்கு நீங்கி, 'பளபள'வென்று இருக்கும்.

* ஊசியில் நுால் கோர்க்க சிரமமாக இருந்தால், நுாலின் நுனியில் சோப்பை கொஞ்சம் தடவி கோர்த்தால் சுலபமாகும்

* துணி தைக்கும் ஊசியை, ஒரு சிறு கம்பளி துண்டில் குத்தி வைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும்

* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால், நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

* மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி, ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால், உளுத்து போகாது.

* வேர்க்கடலை உருண்டை செய்யும்போது, வெல்லப் பாகுடன் சிறிது சர்க்கரையையும் சேர்த்து செய்தால், கரகரப்புடன் இருக்கும்.

* வெள்ளை, 'கேன்வாஷ் ஷூ'வை, கழுவி சிறிது நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் காய வைத்தால், 'பளிச்'சென்று இருக்கும்.

* பல் துலக்கும் பிரஷ்ஷை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, உப்பு கலந்த நீரில் போட்டு உபயோகிக்க வேண்டும்.

* மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியில் சிறிது உப்பை கலந்து வைத்தால், வண்டுகள் வராது.

* மிளகாய் பொடிக்கு, மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்தால், கமறல் வராது.






      Dinamalar
      Follow us