PUBLISHED ON : மே 14, 2023

அ நிறம் | அளவு
ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவில், யானைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது, அந்நாட்டு அரசுக்கு கவலை அளித்துள்ளது.
இதுவரை, யானை பராமரிப்பு பணியில் ஆண்கள் மட்டும் இருந்தனர். ஆண்களை விட பெண்கள் கனிவானவர்கள் என்பதால், யானைகளை அவர்கள் பராமரித்தால், சிறப்பாக இருக்கும் என்று யோசனை கூறப்பட்டது.
அதன்படி, யானைகளுடன் மிகவும் நெருங்கி பழகும் சாம்புரு ஆதிவாசி பெண்களிடம், யானை பராமரிப்பு பணியை ஒப்படைத்தது, அரசு. இந்த பெண்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. அவர்கள் காட்டில் திரியும் யானைகளிடம் பேசுவதுண்டு. யானைகளும் இவர்களிடம் மிகவும் அன்பாக பழகுகின்றன. இப்போது, யானைகள் எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.
— ஜோல்னாபையன்
