sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீட்டிற்குள் தோட்டம்!

/

வீட்டிற்குள் தோட்டம்!

வீட்டிற்குள் தோட்டம்!

வீட்டிற்குள் தோட்டம்!


PUBLISHED ON : நவ 24, 2019

Google News

PUBLISHED ON : நவ 24, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொட்டை மாடியில் இடம் கிடைத்தால், மாடி தோட்டம் போடலாம். இல்லாதவர்கள் வீட்டுக்குள்ளேயே, அதாவது, 'பிளாட்'டுக்குள்ளேயே போட்டுக் கொள்ள வேண்டியது தான்.

பெங்களூரில் சிலர், வீட்டினுள் சுவர்கள், தனி தாங்கிகள் மற்றும் தொட்டிகளில், கண்களை கவரும் செடிகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஜன்னல், சமையலறை பக்கத்தில், வழியில், கதவை ஒட்டி என, பல இடங்களில் வைத்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் இதற்கு வாகாக அமைந்து, அழகை கூட்டுகின்றன.

வீட்டிற்குள் செடி வைத்திருந்தாலும், அதற்கும் சூரிய வெளிச்சம் தேவை. குறைந்தபட்சம் சனி, ஞாயிற்று கிழமைகளில் அவற்றை குறிப்பிட்ட நேரம் வெயிலில் வைத்திருந்து, மீண்டும் வீட்டுக்குள் வைப்பது நல்லது.

வீட்டினுள் வளரும் தாவரங்களுக்கு, குறைந்த தண்ணீரே போதும், கூடுதலாக தண்ணீர் ஊற்றினால், அழுகி விடும்.

பால்கனிகளில் வைக்கும் தாவரங்களுக்கு, ரசாயன உரம் அவசியமில்லை. சமையலறை கழிவுகளை போட்டாலே போதும். ஆனால், அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது.

தாவரங்களை பூச்சிகள் மொய்த்து தொல்லை தராமல் இருக்க, வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்; பூச்சிகள் அண்டாது. 15 நாட்களுக்கு ஒருமுறை, இப்படி செய்வது நல்லது.

வீட்டிற்குள் தாவரங்களை வளர்க்க, அழகாக அமைத்து தர, இன்று பல நிறுவனங்கள் உள்ளன. இதற்கு, 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us