
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகிலேயே உயரமான மலைகளில், நம் இமய மலையும் ஒன்று. இந்த இமாலய மலைகள், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் இருந்ததாக ஆதாரங்களுடன் கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இங்குள்ள, லாங்சா கிராமம் மிக அழகானது. 150 பேர் மட்டும் தான் இங்கு வாழ்கின்றனர்.
இந்த கிராமமும், பக்கத்து கிராமங்களும், கடலுக்கு அடியில் இருந்ததற்கு சான்றாக, இங்கு, கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட சங்குகள் தான், படத்தில் உள்ளது. இதுபோன்ற கடல் சார்ந்த பொருட்கள், இக்கிராம மக்கள் வீடுகளில் இன்னும் இருக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் வாழ்ந்த, குமரி முனையும் கடலுக்குள் இருக்கிறது என்பதிலும் உண்மை இருக்கும் என்று நம்பலாம்.
- ஜோல்னாபையன்

