PUBLISHED ON : ஜூன் 06, 2021

அ நிறம் | அளவு
நாய், பூனை, கிளி போன்றவற்றை செல்லப் பிராணியாக வளர்ப்பது சாதாரணமான விஷயம். ஆனால், ரஷ்யாவின் பென்சா நகரில் வசிக்கும், அலெக்சாண்டர் - மரியா தம்பதி, இந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவர்கள்.
மலைப் பகுதிகளில் வசிக்கும், மலைச் சிங்கம் எனப்படும் ஒருவகை விலங்கை, செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். சிங்கம், புலி போல, பூனை இனத்தைச் சேர்ந்தது; இதுவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
அலெக்சாண்டர் தம்பதி, வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து, இந்த விலங்கை தத்தெடுத்து, தங்கள் வீட்டிலேயே வளர்த்து வருகின்றனர். மெஸ்ஸி என, பெயர் சூட்டி, வளர்ப்பு நாய் போலவே இதற்கு பயிற்சி கொடுத்துள்ளனர். இந்த மலைச் சிங்கம் வந்ததில் இருந்து, அலெக்சாண்டர் வீட்டிற்கு விருந்தினர்கள் யாரும் வருவது இல்லையாம்.
ஜோல்னாபையன்
