PUBLISHED ON : ஜன 26, 2020

முதன் முதலில், காந்திஜியை, 'தேசத் தந்தை' என்று, அழைத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
* காந்திஜியை, மகாத்மா என்று அழைத்தவர், ரவீந்திரநாத் தாகூர்
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர், ஹரிஜன். இதன் பொருள், 'கடவுளின் குழந்தை' என்பதாகும்
* 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்திஜி சொன்ன வாக்கியம், 'செய் அல்லது செத்து மடி'
* யாருக்கு கடிதம் எழுதினாலும், 'தங்களின் கீழ்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார், காந்திஜி
* 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று, காந்திஜி அழைத்தது, வினோபாபாவேவை தான்
* ராட்டை சக்கரத்துக்கு முன், காந்திஜி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால், 'லைப்' ஆங்கில இதழுக்காக எடுக்கப்பட்டது
* மார்டின் லுாதர் கிங், தலாய் லாமா, ஆங்சான் சூகி, நெல்சன் மண்டேலா மற்றும் அடால் போ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலக தலைவர்கள், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதற்கு காரணம், காந்திஜி வழியை பின்பற்றியது தான் என்று, ஒப்புதல் அளித்திருக்கின்றனர்
* இந்தியாவிற்கு வெளியே முதன் முதலில், காந்திஜி தபால் தலை வெளியிட்ட நாடு, அமெரிக்கா. அது மட்டுமின்றி, தன் வாழ்நாளில் அவர், கால் மிதிக்காத நாடும், அமெரிக்கா தான்
* காந்திஜி துவங்கிய, இந்தியன் ஒப்பினியன் இதழ், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, நான்கு மொழிகளில் வெளியானது
* போர்பந்தரில் பிறந்த காந்திஜி ஆரம்பித்த, சபர்மதி ஆசிரமத்தின் நினைவாக தான், 'சபர்மதி எக்ஸ்பிரஸ்' ரயில் விடப்பட்டது
* ஒவ்வொரு இரவும், நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார், காந்திஜி. பின்னாளில் அவரின் சுய சரிதையாகவும் அது மலர்ந்தது.
- மு.க.இப்ராஹிம்.