sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

/

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்

ஜன., 30, காந்திஜி நினைவு தினம்


PUBLISHED ON : ஜன 26, 2020

Google News

PUBLISHED ON : ஜன 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதன் முதலில், காந்திஜியை, 'தேசத் தந்தை' என்று, அழைத்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

* காந்திஜியை, மகாத்மா என்று அழைத்தவர், ரவீந்திரநாத் தாகூர்

* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர், ஹரிஜன். இதன் பொருள், 'கடவுளின் குழந்தை' என்பதாகும்

* 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது, காந்திஜி சொன்ன வாக்கியம், 'செய் அல்லது செத்து மடி'

* யாருக்கு கடிதம் எழுதினாலும், 'தங்களின் கீழ்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார், காந்திஜி

* 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று, காந்திஜி அழைத்தது, வினோபாபாவேவை தான்

* ராட்டை சக்கரத்துக்கு முன், காந்திஜி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால், 'லைப்' ஆங்கில இதழுக்காக எடுக்கப்பட்டது

* மார்டின் லுாதர் கிங், தலாய் லாமா, ஆங்சான் சூகி, நெல்சன் மண்டேலா மற்றும் அடால் போ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலக தலைவர்கள், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதற்கு காரணம், காந்திஜி வழியை பின்பற்றியது தான் என்று, ஒப்புதல் அளித்திருக்கின்றனர்

* இந்தியாவிற்கு வெளியே முதன் முதலில், காந்திஜி தபால் தலை வெளியிட்ட நாடு, அமெரிக்கா. அது மட்டுமின்றி, தன் வாழ்நாளில் அவர், கால் மிதிக்காத நாடும், அமெரிக்கா தான்

* காந்திஜி துவங்கிய, இந்தியன் ஒப்பினியன் இதழ், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, நான்கு மொழிகளில் வெளியானது

* போர்பந்தரில் பிறந்த காந்திஜி ஆரம்பித்த, சபர்மதி ஆசிரமத்தின் நினைவாக தான், 'சபர்மதி எக்ஸ்பிரஸ்' ரயில் விடப்பட்டது

* ஒவ்வொரு இரவும், நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார், காந்திஜி. பின்னாளில் அவரின் சுய சரிதையாகவும் அது மலர்ந்தது.

- மு.க.இப்ராஹிம்.






      Dinamalar
      Follow us