/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை
/
கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை
PUBLISHED ON : மே 05, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டால் முகம் சுளிக்கும்
கம்பளி பூச்சி பருவத்தை
கடந்த பிறகு தான்
வண்ணங்கள் நிரம்பிய
வாழ்வு கிடைக்கிறது
பட்டாம் பூச்சிக்கு!
பாசி படர்ந்த
சகதியை
சங்கடமென்று கருதுவதில்லை
குளத்துக்கு நடுவே
பூத்துச் சிரிக்கும் தாமரை!
பல நாட்கள்
காத்திருப்பிற்கு பிறகே
முத்து சாத்தியமாகிறது
சிப்பிக்கு!
துளித் துளியாய் வீழ்வதற்கு
கவலை கொண்டால்
துள்ளியோடும் குளிர் நதியாய்
எப்படி மாறுவாள் மழையரசி!
கடினங்கள், கசப்புகள்
காத்திருத்தல்கள், சவால்கள்
யாவற்றையும் கடந்து தான்
ஒளி வீசிக்கொண்டிருக்கிறது
பூரணமாய் ஒரு வாழ்க்கை!
இ.எஸ்.லலிதாமதி, சென்னை.