sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை

/

கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை

கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை

கவிதைச்சோலை - பூரணமாய் ஒரு வாழ்க்கை


PUBLISHED ON : மே 05, 2019

Google News

PUBLISHED ON : மே 05, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டால் முகம் சுளிக்கும்

கம்பளி பூச்சி பருவத்தை

கடந்த பிறகு தான்

வண்ணங்கள் நிரம்பிய

வாழ்வு கிடைக்கிறது

பட்டாம் பூச்சிக்கு!

பாசி படர்ந்த

சகதியை

சங்கடமென்று கருதுவதில்லை

குளத்துக்கு நடுவே

பூத்துச் சிரிக்கும் தாமரை!

பல நாட்கள்

காத்திருப்பிற்கு பிறகே

முத்து சாத்தியமாகிறது

சிப்பிக்கு!

துளித் துளியாய் வீழ்வதற்கு

கவலை கொண்டால்

துள்ளியோடும் குளிர் நதியாய்

எப்படி மாறுவாள் மழையரசி!

கடினங்கள், கசப்புகள்

காத்திருத்தல்கள், சவால்கள்

யாவற்றையும் கடந்து தான்

ஒளி வீசிக்கொண்டிருக்கிறது

பூரணமாய் ஒரு வாழ்க்கை!

இ.எஸ்.லலிதாமதி, சென்னை.






      Dinamalar
      Follow us