sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!

/

கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!

கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!

கவிதைச்சோலை! - இந்தியா... ஓர் தாய்நாடு!


PUBLISHED ON : ஜன 24, 2021

Google News

PUBLISHED ON : ஜன 24, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிகப்பெரிய அமைதி

நம் மனதிற்குள் உள்ளது

ஆனால், மிகச்சிறிய போரால்

தோற்கடிக்கப்படுகிறோம்!

மிகப்பெரிய நம்பிக்கை

நம் மனதிற்குள் உள்ளது

ஆனால், மிகச்சிறிய அவநம்பிக்கையால்

தோல்வி அடைகிறோம்!

மிகப்பெரிய அன்பு

நம் மனதிலே உண்டு

ஆனால், மிகச்சிறிய பகையால்

பிரிவுகள் ஏற்படுகிறது!

மிகப்பெரிய மன்னிப்பு

நம் மனதிலே ஓடுகிறது

ஆனால், மிகச்சிறிய வன்மத்தால்

ரணமாக்கப்படுகிறோம்!

மிகப்பெரிய வலிமை

நம் மனதிற்குள் உள்ளது

ஆனால், மிகச்சிறிய துரோகத்தால்

வீழ்த்தப்படுகிறோம்!

மிகப்பெரிய அரவணைப்பு

நம் எல்லாரிடமும் உண்டு

ஆனால், மிகச்சிறிய பிரிவினையால்

இழக்கப்படுகிறோம்!

மிகப்பெரிய நட்பு

நம் வாழ்வை அலங்கரிக்கிறது

ஆனால், மிகச்சிறிய கூடா நட்பால்

கேடாய் முடிகிறது!

மிகப்பெரிய பொது நலம்

நம் எல்லாரிடமும் உண்டு

ஆனால், மிகச்சிறிய சுயநலத்தால்

பெரிதும் பாதிக்கப்படுகிறோம்!

மிகப்பெரிய நீதி

நம் நாட்டில் உள்ளது

ஆனால், மிகச்சிறிய அநீதியால்

நிர்மூலமாக்கப்படுகிறோம்!

மிகப்பெரிய ஜனநாயக நாடாக

இந்தியா உள்ளது

அதனால், உலகிற்கே தாய்நாடாய்

நாம் உருவாக்குவோம்!

கோ. சந்திரன், சென்னை.






      Dinamalar
      Follow us