sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!

/

விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!

விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!

விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!


PUBLISHED ON : டிச 04, 2022

Google News

PUBLISHED ON : டிச 04, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுகம் ஏற்றினால், மத்திம பலன் கிடைக்கும். இரு முகங்கள் ஏற்றினால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். மூன்று முகங்கள் ஏற்றினால், புத்திர பாக்கியம் கிட்டும். நான்கு முகங்கள் ஏற்றினால், பசு, பூமி உள்ளிட்ட செல்வங்கள் கிடைக்கும். ஐந்து முகங்கள் ஏற்றினால், சகல செல்வங்களும் பெருகும்.

விளக்கில் தாமரைத் தண்டு திரி போட்டு, பசு நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடும்போது, வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்

* அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்ந்தது தான், விளக்கு. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் இது உணர்த்துகிறது. பொதுவாக, வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், மகாலட்சுமி அங்கு வாசம் செய்வாள். தீய சக்திகளும் நம்மை அண்டாது காப்பாள்.

விளக்கு எரியாத இடத்தில் வழிபடக் கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் எரியும் விளக்கை அணைக்கக் கூடாது. அணைந்த விளக்கை ஏற்றலாம். விளக்கை திரி தடவி ஏற்றிய பின், கையில் பற்றிய எண்ணெயைத் தலையில் தடவக் கூடாது

* அண்ணாமலை தீபம் பார்த்தால், 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும். வேறு எந்த விழா கண்டாலும் பார்ப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலை தீபத்துக்கு மட்டுமே இத்தகைய தனிச்சிறப்பு

* குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பெண்மைக்குரிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம் மற்றும் பொறுமை ஆகிய ஐந்து நற்பண்புகளைக் குறிக்கும்.

விளக்குகள் பளிச்சிட...

* எலுமிச்சம் பழம், புளி இவற்றை நீரில் ஊற வைத்து மிக்சியில் அரைத்து, நீரில் கலக்கி விடவும். கூடவே கடலை மாவையும் சேர்க்க வேண்டும். கடலை மாவு, விளக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்கும். இதில் பித்தளை விளக்குகளை ஓர் இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள், பாத்திரம் கழுவும் பவுடர் கொண்டு துலக்கினால், விளக்குகள் பளிச்சென்று ஆகிவிடும்

* சூடான வெந்நீரில் சோப்பு பவுடர் போட்டு, அதில் எண்ணெய் பிசுக்கான அகல் விளக்குகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவினால், எண்ணெய் பிசுக்கு போய் விடும்

* புதிய அகல் விளக்குகளை ஒருநாள் முழுவதும் நீரில் மூழ்க வைத்து, பின்பு கழுவி காய வைத்து பயன்படுத்தினால், எண்ணெய் அதிகம் குடிக்காது

* சின்ன சின்ன அட்டைகளை வட்டமாகவோ, சதுரமாகவோ வெட்டி, ஒவ்வொரு விளக்கின் அடியில் வைத்தால், தரையில் எண்ணெய் கறை படிவதை தவிர்க்கலாம்.






      Dinamalar
      Follow us