தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானோ?

* இருண்டு கிடந்த சமூகத்தின்

விடியல் கண்டான்...

சின்னச் சின்ன ஆசைகளில்

சிம்மாசனமிட்டான்!

* கல்லை சிற்பமாக்கினான்...

மின்னலை கைது செய்து

மின்சாரம் கண்டான்!

* சூரியன் தடுக்கி விழுகையில்

சிந்தித்தான்...

சிந்தித்ததெல்லாம்

சித்திரமாக்கினான்!

* இயற்கையின்

முதுகில் சவாரி செய்து

கணினிமயமாக்கினான்!

* பூமியின் தோளில் வெயில்

போர்த்தி,

பகலின் மடியில் வெப்பச்

சலனம்...

அந்தி ஓய்வெடுத்தாலும்

அடங்கவில்லை அனல் காற்று!

* பூமியின் அக்கினி கதவு

திறந்து கொண்டதால்

பிரபஞ்ச நுரையீரல்

சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!

* கடலின் சுவாசப்பை அடங்கி

காற்று ஓய்வெடுக்க சென்றதால்

பற்றி எரிகிறது பனிமலை!

* அனல் சொட்டச் சொட்ட

அக்கினி மழையை

அள்ளித் தெளிக்கிறது இயற்கை...

நீரின்றி காய்கிறது தேசம்!

* வெப்பச் சலனம்...

மழைக் காலம் பொய்த்துபோய்

பூமி ரத்தக்களமாகி

வாழ்வின் சாவுக்கு

வழி வகுத்து விட்டது!

* காணி நிலம் கூட இல்லை

மயிற்கூச்சங்களாய்

வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!

* ஏரிகள் குளங்களெல்லாம்

தொழிற்சாலை...

தண்ணீரில் ரசாயன கலவை

வாழ்வியல் முழுவதும்

வைரஸ் கிருமிகள்!

* இயற்கையை வென்று விட்டதாய்

ஆர்ப்பரிக்கிறான்...

மருந்தை உணவாக

உட்கொள்வது தெரியாமல்!

* இயற்கையின் பேரழிவுக்கு

மனிதன் எடுத்த ஆயுதம்

விஞ்ஞான வளர்ச்சி...

பருவநிலை மாற்றங்களால்

கவலையுற்ற பூமாதேவி

அயர்ந்து கண்ணுறங்குகிறாள்

இயற்கையோடு இயைந்த வாழ்வு

இதுதானா வென்று!

— க.மோகன், அறந்தாங்கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us