தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொன்னது நீதானா?

* சில நாட்களாகவே

உன் முகத்தாமரை

மலராத மொட்டாகவே

முகிழ்த்திருக்கிறது!

* புன்னகை முத்துக்களை

சிரித்துச் சிந்தாமல்

உன் இதழ்களுக்குள்ளே

நீ சேமித்துக் கொண்டதனால்

மனதால் மட்டுமே

நான் நஷ்டப்பட்டிருக்கிறேன்!

* என் ஞாபகக் குளிரில்

உன் நினைவுகளையே

போர்வையாக்கிக் கொள்கிறேன்!

* என் உதடுகள்

உச்சரித்த வார்த்தைகளில்

ஏதாகிலும் ஒன்று,

உன் இதயத்தை

தைத்திருக்கக்கூடும்!

* என்னையே அறியாத

அந்தத் தீராத வார்த்தைக்காக

உன்னில் அடைக்கலமாகியிருக்கும்

என் இதயத்தை

கழற்றி எறிந்து விடாதே!

* அது,

நீ தலையில் சூடிய

வாடிய பூ அல்ல...

உன் ஆன்மாவோடு

ஐக்கியமாகியிருக்கும்

என்றும் வாடாத அன்பு!

* நீ எங்கிருந்தாலும்

அது உனக்காக மட்டுமே

எப்போதும்

துடித்துக் கொண்டேயிருக்கும்!

ஜோதி பாரதி, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us