sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 22, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொன்னது நீதானா?

* சில நாட்களாகவே

உன் முகத்தாமரை

மலராத மொட்டாகவே

முகிழ்த்திருக்கிறது!

* புன்னகை முத்துக்களை

சிரித்துச் சிந்தாமல்

உன் இதழ்களுக்குள்ளே

நீ சேமித்துக் கொண்டதனால்

மனதால் மட்டுமே

நான் நஷ்டப்பட்டிருக்கிறேன்!

* என் ஞாபகக் குளிரில்

உன் நினைவுகளையே

போர்வையாக்கிக் கொள்கிறேன்!

* என் உதடுகள்

உச்சரித்த வார்த்தைகளில்

ஏதாகிலும் ஒன்று,

உன் இதயத்தை

தைத்திருக்கக்கூடும்!

* என்னையே அறியாத

அந்தத் தீராத வார்த்தைக்காக

உன்னில் அடைக்கலமாகியிருக்கும்

என் இதயத்தை

கழற்றி எறிந்து விடாதே!

* அது,

நீ தலையில் சூடிய

வாடிய பூ அல்ல...

உன் ஆன்மாவோடு

ஐக்கியமாகியிருக்கும்

என்றும் வாடாத அன்பு!

* நீ எங்கிருந்தாலும்

அது உனக்காக மட்டுமே

எப்போதும்

துடித்துக் கொண்டேயிருக்கும்!

ஜோதி பாரதி, தேனி.






      Dinamalar
      Follow us