sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 29, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நட்பா காதலா?

* உன்னைக்

காணும்

ஒவ்வொரு

வேளையிலும்,

பட்டாம்பூச்சியின்

சிறகெனப்

பட படக்கும்

என் இதயத்

துடிப்பை, நான்

எண்ணும்

போதெல்லாம்...

* வாய் திறக்கும்

போதெல்லாம்

உன் பெயரை

மட்டுமே

உச்சரிக்கத்

துடிக்கும், என்

நாவினை

கட்டுப்படுத்த,

என் உதடுகளை

கடித்துக்

கொள்ளும்

போதெல்லாம்...

* எண்ணிலா

நண்பர்கள்

என்னோடு

பேசினாலும்,

உன் குரலை

மட்டும்,

விசேஷ

ஒலியால்,

உணர்த்தி,

என்னை

உலுக்கிடும்

செல்பேசி...

சிணுங்கும்

போதெல்லாம்...

* பிறந்த நாள்

பரிசுகளில்...

பத்திரமாய்

பாதுகாக்கும், உன்

கையெழுத்திட்ட

வாழ்த்து அட்டையை

வாசிக்கும்

போதெல்லாம்...

* கல்லூரி ஆண்டு

விழாவில்,

கடைசியாய்

வந்த நீ,

அழுத்தமாய் தந்த

அந்தப் ஸ்பரிசத்தை

அடிக்கடி நான்

அனுபவிக்கும் போதெல்லாம்...

* நண்பரோடு சென்ற

சுற்றுலாவில்,

என் தோளில்

உன் கைபோட்டு,

மோனாலிசாவென

புன்னகை சிந்தும்,

புகைப்படத்தை,

நான் பார்க்கும்

போதெல்லாம்...

* நட்பு தான் என

நம்பினாலும்,

காதலாய்

இருக்குமோ எனக்

கலங்கும், என்

பெற்றோரிடம் -

கண்டிப்பாய் நான்

பதில் சொல்ல

வேண்டும்...

* சொல்...

நமக்குள்

இருப்பது,

நட்பா,

காதலா?

கு.மா.பா.கபிலன், சென்னை.






      Dinamalar
      Follow us