தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனமருந்தே மாமருந்து!

* புண்ணிற்கு மருந்திடலாம்

மனதிற்கு மருந்திட முடியுமா?

முடியும்...

அன்பான ஆறுதலான வார்த்தைகளால்!

* புற அழுக்கை நீக்கலாம்

அக அழுக்கை நீக்க முடியுமா?

முடியும்...

அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்!

* கை, கால் முறிவிற்கு

கட்டுப் போடலாம்

மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா?

முடியும்...

பரஸ்பர சமாதான பேச்சுகளால்!

* மலச்சிக்கலுக்கு மருந்துண்டு

மனச் சிக்கலுக்கு மருந்துண்டா?

உண்டு...

மனதார மனம் விட்டு பேசுவதால்!

* உடல் சோர்வுக்கு வழி உண்டு

மனச்சோர்வுக்கு வழி உண்டா?

உண்டு...

தன்னம்பிக்கையுடன் செயலாற்றுகையில்!

* உடல் வலி போகும்

உள்ளத்து வலி போகுமா?

போகும்...

நல்ல வழியை கடைபிடிக்கையில்!

* வாய்ப்புண்ணுக்கு மருந்துண்டு

வாடிய மனதிற்கு மருந்துண்டா?

உண்டு...

வாய்விட்டு சிரிக்கையில் !

* ஆக...

அங்கத்திற்கு மருந்திடுவதை விட

அகத்திற்கு மருந்திடுவதே மேல்...

அந்த மன மருந்தே

அனைவருக்கும் தேவையான

மாமருந்து!

முத்தூஸ், தொண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us