தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனமாய் இருப்போம்!

* வெளிச்சம் நிரம்பும்

வீட்டிலிருந்து

இருள் வெளியேறும்

என்பதைப் போல...

இட்டு நிரப்புவதில்

இருக்கிறது

இன்பத்தின் சூட்சுமம்!

* இதயத்தில்

அன்பு நிரம்ப

வன்மம் வெளியேறும்;

இரக்கம் நிரம்ப

கோபம் வெளியேறும்!

* பொறுமை நிரம்ப

பொல்லாங்கு வெளியேறும்;

பிறர் நலம் நிரம்ப

தன்னலம் வெளியேறும்!

* இன்மொழி நிரம்ப

வசைமொழி வெளியேறும்;

துணிவு நிரம்ப

அச்சம் வெளியேறும்!

* நேர்மை நிரம்ப

கயமை வெளியேறும்;

திருப்தி நிரம்ப

பொறாமை வெளியேறும்!

* முயற்சி நிரம்ப

தடைகளும் வெளியேறும்;

தோழமை நிரம்ப

பகைமை வெளியேறும்!

* வெளியேற்றப்பட

வேண்டியதை

கணக்கில் எடுத்து,

இட்டு நிரப்புவதில்

கவனமாய் இருப்போம்

இன்று முதல்...

நம் உள்ளத்தில் தொடங்கி

உலகம் முழுவதும்!

கீர்த்தி, கொளத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us