sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 17, 2013

Google News

PUBLISHED ON : மார் 17, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல் வந்ததால்...

* என்னால் மட்டும்

துளையில்லாத புல்லாங்குழல்

இசைக்க முடிகிறது!

* என் தோட்டத்தில் மட்டும்

மலர்கள்

வான் நோக்கி உதிர்கின்றன!

* நான் பார்க்கும்

கண்ணாடியில் மட்டும்

அவள் முகம் தெரிகிறது!

* என் விழிகள் உறங்கியும்

நான் உறங்காத இரவுகள்

எத்தனை எத்தனை!

* என்னை நானே சுற்றிக் கொண்டு

அவளையும் சுற்றி வருகிறேன்!

* பெருங்குடல்

சிறுகுடலை தின்றாலும்

என், 'நா' உண்ண மறுக்கிறது!

* பாதங்களில்

முள்ளை ஏற்றிக் கொண்டு

புன்னகைக்கிறேன்!

* இன்றுதான்

எனக்குள் தூங்கும் மிருகம்

தமிழ் பேசுகிறது!

* வானவில்லின்

எட்டாவது நிறம்

எனக்கு மட்டும் எட்டுகிறது!

* மை இல்லாத பேனாவில்

கவிதை எழுதுகிறேன்!

* உரசி செல்லும் காற்றிலும்

கோபப்படுகிறேன்!

* இதயம் கூட மிரட்டுகிறது!

அவள் அருகில்

இல்லாத உன்னுள்-நான்

துடித்தால் என்ன...

வெடித்தால் என்ன என்று!

அருண், திருவாரூர்.






      Dinamalar
      Follow us