தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 17, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காதல் வந்ததால்...

* என்னால் மட்டும்

துளையில்லாத புல்லாங்குழல்

இசைக்க முடிகிறது!

* என் தோட்டத்தில் மட்டும்

மலர்கள்

வான் நோக்கி உதிர்கின்றன!

* நான் பார்க்கும்

கண்ணாடியில் மட்டும்

அவள் முகம் தெரிகிறது!

* என் விழிகள் உறங்கியும்

நான் உறங்காத இரவுகள்

எத்தனை எத்தனை!

* என்னை நானே சுற்றிக் கொண்டு

அவளையும் சுற்றி வருகிறேன்!

* பெருங்குடல்

சிறுகுடலை தின்றாலும்

என், 'நா' உண்ண மறுக்கிறது!

* பாதங்களில்

முள்ளை ஏற்றிக் கொண்டு

புன்னகைக்கிறேன்!

* இன்றுதான்

எனக்குள் தூங்கும் மிருகம்

தமிழ் பேசுகிறது!

* வானவில்லின்

எட்டாவது நிறம்

எனக்கு மட்டும் எட்டுகிறது!

* மை இல்லாத பேனாவில்

கவிதை எழுதுகிறேன்!

* உரசி செல்லும் காற்றிலும்

கோபப்படுகிறேன்!

* இதயம் கூட மிரட்டுகிறது!

அவள் அருகில்

இல்லாத உன்னுள்-நான்

துடித்தால் என்ன...

வெடித்தால் என்ன என்று!

அருண், திருவாரூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us