
கோடையும் நீயே, வாடையும் நீயே!
* உன் பார்வையால் மட்டும்
எப்படி முடிகிறது...
கோடையிலும்,
வாடையிலும் குளிர வைக்க?
* எப்படியோ...
என் இரவும், பகலும்
நீயாகவே இருக்கிறாய்!
* நீ என்ன...
சூரியனுக்கு பிறந்தவளா?
அதனால் தானோ
உன் நிராகரிப்பு என்னை
எரித்து சாம்பலாக்குகிறது!
* இதயமென்பது மென்மையானது
அதன்மீது பூக்களை வீசு...
பூகம்பத்தை வீசாதே!
* உன் புன்னகை எப்போதும்
குளிர்ச்சி தரும் விஷயம்...
உன் அணுகுமுறைதான்
நெருப்பின் எதிரொளி!
* உன் பார்வை என்னை
பூக்க வைக்கிறது...
உன் மவுனம் தான்
என்னை உதிர வைக்கிறது!
* உன் பாதச்சுவட்டில்
நீர் சுரக்கிறது...
உன் நெஞ்சுக்கூடுதான்
கல் சுமக்கிறது!
* இரவு நேரத்தில்
கனவில் சிரிக்கிறாய்...
பகல் நேரத்தில் தான்
படுத்தித் தொலைக்கிறாய்!
* ஒரே சமயத்தில்
என்னையும் பார்க்கிறாய்...
மண்ணையும் பார்க்கிறாய்...
என்னை புதைக்கவா...
வெட்கம் புதைக்கவா...
* உன் பார்வை எனக்கு
லாபத்தையும் தருகிறது,
நஷ்டத்தையும் தருகிறது!
* உன் பார்வை எனக்கு
கோடையையும் தருகிறது,
வாடையையும் தருகிறது!
* அடீ...
உன்னையே என்
கல்வெட்டாய் நினைத்திருக்கிறேன்!
* காலம் காலமாய்
நான் ஆராயப்பட வேண்டும்
தயவு செய்து என்னை காதலி!
— அதிரை.இளையசாகுல், திருவாரூர்.

