sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 07, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடையும் நீயே, வாடையும் நீயே!

* உன் பார்வையால் மட்டும்

எப்படி முடிகிறது...

கோடையிலும்,

வாடையிலும் குளிர வைக்க?

* எப்படியோ...

என் இரவும், பகலும்

நீயாகவே இருக்கிறாய்!

* நீ என்ன...

சூரியனுக்கு பிறந்தவளா?

அதனால் தானோ

உன் நிராகரிப்பு என்னை

எரித்து சாம்பலாக்குகிறது!

* இதயமென்பது மென்மையானது

அதன்மீது பூக்களை வீசு...

பூகம்பத்தை வீசாதே!

* உன் புன்னகை எப்போதும்

குளிர்ச்சி தரும் விஷயம்...

உன் அணுகுமுறைதான்

நெருப்பின் எதிரொளி!

* உன் பார்வை என்னை

பூக்க வைக்கிறது...

உன் மவுனம் தான்

என்னை உதிர வைக்கிறது!

* உன் பாதச்சுவட்டில்

நீர் சுரக்கிறது...

உன் நெஞ்சுக்கூடுதான்

கல் சுமக்கிறது!

* இரவு நேரத்தில்

கனவில் சிரிக்கிறாய்...

பகல் நேரத்தில் தான்

படுத்தித் தொலைக்கிறாய்!

* ஒரே சமயத்தில்

என்னையும் பார்க்கிறாய்...

மண்ணையும் பார்க்கிறாய்...

என்னை புதைக்கவா...

வெட்கம் புதைக்கவா...

* உன் பார்வை எனக்கு

லாபத்தையும் தருகிறது,

நஷ்டத்தையும் தருகிறது!

* உன் பார்வை எனக்கு

கோடையையும் தருகிறது,

வாடையையும் தருகிறது!

* அடீ...

உன்னையே என்

கல்வெட்டாய் நினைத்திருக்கிறேன்!

* காலம் காலமாய்

நான் ஆராயப்பட வேண்டும்

தயவு செய்து என்னை காதலி!

அதிரை.இளையசாகுல், திருவாரூர்.






      Dinamalar
      Follow us