தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 22, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரும்பிப் பார்!

* திரும்பிப் பார்!

வெற்றிப் பாதையில்

வீறு நடை போட்டாலும்

கடந்து வந்த பாதையை

சற்றேனும் திரும்பிப் பார்!

* அன்னை இல்லையென்றால்

அகிலத்தில் நீயேது

அன்பு ஊட்டிய அவளை

முதியோர் இல்லத்திலே விடலாமா?

சற்றேனும் திரும்பிப் பார்!

* வேண்டியது கொடுக்க

வசதியில்லாவிட்டாலும்

நீ வேண்டியதை எல்லாம்

கொடுக்க அயராது உழைத்த

உன் அப்பாவை

தோள் கொடுத்து தாங்கியதுண்டா?

சற்றேனும் திரும்பிப் பார்!

* தன் நலம் கருதாது

உன் நலம் கருதி

உனக்கு அறிவூட்டி

உன் உயர்வில் பெருமையடைந்த

ஆசிரியன் போல்

யாருக்கேனும் வழிகாட்டினாயா நீ?

சற்றேனும் திரும்பிப் பார்!

* உன்னையே சுற்றிச் சுற்றி

உயிராய் உணர்வாய்

உன் துயரம் துடைத்திட்ட

நண்பன் நல்லாயிருக்கானா?

சற்றேனும் திரும்பிப் பார்!

* மரம் வெட்டி

ஜன்னல் செய்தோம்

கதவு செய்தோம்

பீரோ செய்தோம்

கட்டில் செய்தோம்

ஒரு மரமாவது நட்டு வைத்தோமா?

சற்றேனும் திரும்பிப் பார்!

* குளத்து நீரில் குளித்தோம்

ஊரணி நீரைக் குடித்தோம்

ஆற்று நீரில் பயிர் செய்தோம்

ஏரி நீரில் உல்லாச பயணம் போனோம்

என்றேனும் எதையேனும்

சுத்தப்படுத்தினோமா?

சற்றேனும் திரும்பிப் பார்!

* திரும்பிப் பார்...

இருளடைந்த வாழ்க்கை பலருக்கு

சிறு வெளிச்சமாவது அதில்

ஏற்ற முடியுமாவென

சற்றேனும் திரும்பிப் பார்!

சுபானு, கழனிவாசல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us