தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்குப் பின்...

* தேடித்தேடி அலைகிறது...

மழைநீர்

தங்கிக் கொள்ள

ஏரிகளும், குளங்களும்

எங்கே என்று!

* பயனின்றி அழியவே கூடாது...

உணர்த்தியது

இலை நுனியில்

தொங்கிக் கொண்டிருக்கும்

கடைசி சொட்டு மழைத்துளி!

* இடுப்பிலிருந்து இறங்கி

விளையாடத் துடிக்கும்

குழந்தையைப் போல்

கெஞ்சிக் கொண்டிருக்கிறது

காயப்போட்ட துணிகளில்

தங்கிக் கொண்ட மழைநீர்!

* ஏழைகளின் குடிசையில்

எத்தனை ஓட்டை...

அடையாளம் காட்டியது

மழைநீர்!

* சோதனை கூடமாகிறது

மழைநீர்...

காகிதத்தில் கப்பல் விடும்

குழந்தை விஞ்ஞானிகளுக்கு!

* சென்று வந்த இடங்களில்

பதிந்து கிடக்கும்

பாதச் சுவடுகளை

கண்டு ரசிக்கிறது மனம்

ஈர மணலில்!

* மண்ணுக்கும் வாசமுண்டு

என்று உணர்த்தியது

ஆசை மழை!

* தவளையின் குரலையும்

ரசித்திட வைத்தது

மழை ஓ#ந்த நேரம்!

* சிறுதுளி பெருவெள்ளம்

சேமிப்பை உணர்த்தும்

மழைத்துளி!

* குழிகளில் தேங்கிக் கிடக்கும்

மழைநீரை

தாண்டி செல்வோருக்கு

தெரிவதில்லை

இது பாவங்களை போக்க வந்த

புனித நீரென்று!

* விவசாயத்தை

முத்தமிட்ட இடத்திலெல்லாம்

கட்டடங்களாய் முளைத்து

கொண்டிருப்பது கண்டு

அழுது புலம்பிடும் ஓசை

யாருக்கும் கேட்கவேயில்லை

மழைவிட்ட பிறகும்!

ஆ.நடராஜன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us