sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 24, 2013

Google News

PUBLISHED ON : நவ 24, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல் அழகே அழகு!

பருவ பயணத்தின்

பல்லக்கு, காதல்...

பயணிப்பவன்

பல்லக்கை சுமக்க,

பதவிசமாய் பயணிக்கிறது

காதல்!

சுமப்பவர்களை அது

சும்மா விடுவதில்லை...

தவமெதுவும் இருக்காமல்

தரப்படும் வரம், காதல்!

அதை

தருகிற தேவதை

வருகிற வழி தான்

புரியாத புதிராய்

இன்றும் இருக்கிறது!

இந்த வரம் தரும்

தேவதைகள்

வரத்தை தந்து விட்டு,

கணப் பொழுதில்

காணாமல் போய் விடுகின்றனர்...

தந்து போன வரமோ

வந்து வந்து வதைக்கிறது!

வரம் பெற்றவர்கள்

வாழ்வில்

சுபம் பெற்றவர்கள்!

கண்களை மறைப்பதல்ல

காதல்...

அது, அகக்கண்கள் திறக்கும்

அழகிய சாவி!

தன்னை அறிதலுக்கு

பக்தி மட்டுமல்ல

காதலும் கருவி தான்!

இருவரின்

இதய பரிமாற்றத்திற்கு

தூது போகும் புறா

காதல்!

உடன்படிக்கைகளை

எழுதாமல், எழுதி

கையெழுத்திடாதவர்களையும்

கைதியாக்கி விடுகிறது!

விட்டுக் கொடுத்தலுக்கு

ஒற்றை வார்த்தையில்

ஒரு விளக்கம் தான்

காதல்!

வரம் வாங்கியவர்களில் சிலர்

அதை

செலவழிக்க தெரியாமல்

சிக்கித் தவிக்கின்றனர்!

கணக்கில்லாமல்

வரும் காதல் கூட

ஒரு வகையில்

கறுப்புப் பணம் தான்!

அழகை ஆராதிப்பது மட்டும்

காதல் அல்ல...

காதலே அழகு தான்

அதை ஆராதிக்க

தவமிருக்க வேண்டாம்...

இதயம் திறந்திருக்க வேண்டும்!

- ஜீவன், நெல்லை.






      Dinamalar
      Follow us