
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்தன் பெயர்தான்!
ஆண்டுக்கொரு முறை
அடைமழை நேரத்தில்
அடியேன் வருவேன் உங்கள்
அன்பை பெறுவேன்!
தீபம் ஏற்றி
திகட்டா இனிப்பு செய்து
திக்கெட்டும் அதிர வெடித்து
என்னை கொண்டாடுவீர்!
குளிரை போக்கி
குதூகலித்து வாழவே
வெடிக்கும் வழக்கத்தை
விடியலில் வைத்தேன்!
நடுக்கம் போக்கி
நலமுடன் வாழவே
இனிப்பு பண்டங்களை
அறிமுக படுத்தினேன்!
நரகாசுரன் இறந்த நாளே
எந்தன் நாள் என்று
உலகம் சொல்லும்
உண்மை எதுவென்றால்...
அக்கிரமும், அதர்மமும்
அண்டம் விட்டு
அகலும் நாளே
என்றும் எந்தன் நாள்!
நல்லதும் நலமும்
நாட்டில் பெருகவே
ஆண்டுதோறும் வருகிறேன் நானும்
வளமிகுந்திடவே!
வாய்மையும் நேர்மையும்
வாழ்ந்திட வென்றே
கங்கணம் கட்டுவோம்
கங்கா ஸ்நானம் முடித்து!
எந்தன் பெயர்தான்
தீபாவளி யென்று
அனைவரும் அறிவீர்
அமைதியைப் பெறுவீர்!
— ஆர். ஆத்மநாதன்,
ஊரப்பாக்கம்.