sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 01, 2016

Google News

PUBLISHED ON : மே 01, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரட்சியாளர் பிறப்பதில்லை

புரட்சியாளன் பிறப்பதில்லை

உருவாக்கப்படுகிறான்!

சர்வாதிகாரம்

தலை தூக்கும் போது,

ஜன சமுத்திரம்

பொங்கி எழுவது

அவசியம்!

உழைப்பை சுரண்டி

குருதி குடிக்கும்

குள்ள நரி யார்?

காயப்படும் எறும்பும்

கடிக்க முற்படும்

அடிபடும் நாமும்

துடிப்பது தவறல்லவே!

ஓட்டுக்காக

நோட்டு வாங்கி

ஜனநாயக உரிமையை

அடகு வைப்பதா?

பாட்டாளிக்கும்

பாட்டுக்கும்

உயிர் கொடுத்த

பட்டுக்கோட்டை

பாடகரை மறக்கலாமா?

குண்டுக்கு இரையான

தேச பிதாவின்

தேசத்தை மறக்கலாமா?

ஜாதி, மதம் பேசி

குருதி ஆறு

ஓடுவது நியாயமா?

ஏழைகள் இருக்கலாம்

வறுமை இருக்க கூடாது...

வலிமை இருக்கலாம்

வன்முறை இருக்க கூடாது...

மனித வாழ்வு

மகிழ்ச்சியாக இருக்க

உண்ண உணவு

உடுக்க உடை

உயர பொருளாதாரம்,

இருக்க இடம்

இந்த நான்கும்

இருந்தால்...

நாட்டில் எதற்கு

காவல் நிலையம்

எதற்கு சிறைச்சாலை?

கலகம் இன்றி

உலகம் இருந்தால்...

உழைத்து வாழ்வோர்

உயர்வு பெறுவர்!

சுரண்டும் வர்க்கம்

சுருண்டு போகட்டும்

வழங்கும் வர்க்கம்

வாரி வழங்கட்டும்

உழைக்கும் வர்க்கம்

உள்ளம் சிரிக்கட்டும்!

மே தின புரட்சி

மேதினில் வளர்ச்சி!

சு.சக்திவேல், திண்டுக்கல்






      Dinamalar
      Follow us