sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 26, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டு வர வேண்டும்

விதைக்குள்

பொதிந்து இருப்பினும்

மண்ணில் புதைந்து

எழும்ப வேண்டும்

விருட்சமாக வளர்வதற்கு!

கடலுக்குள்

கலந்து இருப்பினும்

ஆவியாக மேலேறி

கீழிறங்க வேண்டும்

மழைநீராய் பொழிவதற்கு!

தங்கத்திற்குள்

விரவி இருப்பினும்

நெருப்பில் உருகி

உறைய வேண்டும்

ஆபரணமாய் ஜொலிப்பதற்கு!

மூங்கிலுக்குள்

ஒளிந்து இருப்பினும்

தீக்காயமுற்று வர வேண்டும்

புல்லாங்குழலாய் இசைப்பதற்கு!

கரும்புக்குள்

கரைந்து இருப்பினும்

ஆலையில் நசுங்கி

பிழைத்து வர வேண்டும்

கற்கண்டாய் இனிப்பதற்கு!

களிமண்ணுக்குள்

கூடி இருப்பினும்

குழைத்துப் பிசைந்தும்

குதூகலித்து வர வேண்டும்

பாண்டங்களாய் மாறுவதற்கு!

துணிக்குள்

பரவி இருப்பினும்

ஊசிமுனையால்

துளைபட்டு வர வேண்டும்

ஆடையாய் ஆவதற்கு!

கல்லுக்குள்

கைகோர்த்து இருப்பினும்

உளியால் சிதலப்பட்டு

சிரித்து வர வேண்டும்

சிற்பங்களாய் சிறப்பதற்கு!

வெற்றிகள் எதுவும்

வெறுமனே

கிடைத்து விடுவதில்லை

எனும்போது...

சங்கடம் தரும்

சவால்களை சமாளித்து

மீண்டு வரத்தானே வேண்டும்

மாமனிதனாய் மாறுவதற்கு!

கீர்த்தி, கொளத்தூர்.






      Dinamalar
      Follow us