sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 18, 2018

Google News

PUBLISHED ON : நவ 18, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதற்காக?

கனவுகள் தான் சுகம் என்றால்

காட்சிகள் எதற்காக...

வாழ்க்கை தான் நலம் என்றால்

மரணம் எதற்காக...

மவுனம் தான் சிறந்ததெனில்

மொழி எதற்காக...

தேடுதல் வேண்டுமெனில்

திருப்தி எதற்காக...

உறங்குவது தான் அமைதி எனில்

விழிப்பது எதற்காக...

அறிவு தான் பெரிதென்றால்

செல்வம் எதற்காக...

உறவு தான் உரம் என்றால்

பிரிவு எதற்காக...

அன்பு தான் நிஜம் என்றால்

கோபம் எதற்காக...

ஒளி தான் உண்மையெனில்

இருள் எதற்காக...

வாலிபம் தான் வாழ்க்கை என்றால்

முதுமை எதற்காக...

எளிமை தான் மேன்மையெனில்

வளமை எதற்காக...

காதலே மேன்மை என்றால்

காமம் எதற்காக...

ஏனெனென்றால்

ஒன்றினால் தான் மற்றொன்று

ஒன்றில் தான் மற்றொன்று

ஒளிந்திருக்கிறது

அதற்காக, அதற்காக, அதற்காக!

தேவவிரதன், சென்னை.






      Dinamalar
      Follow us