sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 16, 2018

Google News

PUBLISHED ON : டிச 16, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் உலகம் நீயாக!

நிமிடத்திற்கு அறுபது நொடிகளல்ல

அதற்கு மேல் ஒன்றைக் கூட்டினாலும்

அங்கேயும் நீதான் வந்து

துடித்துக்கொண்டிருப்பாய்

என் ஞாபக நொடிகளில்...

ஒரு நாளைக்கு

இருபத்தினான்கு மணியல்ல

அதற்கு மேல் எவ்வளவு நீட்டித்தாலும்

என் நினைவுகளின் நிரந்தர வாசியாக

நீதான் இருப்பாய் எப்போதும்!

இரவு பகல்

இரு பொழுதுகளைத் தாண்டி

மூன்றாவதாக ஒன்றைக் கண்டறிந்தாலும்

நீதான் துடித்துக்கொண்டிருப்பாய்

என் இதய கடிகாரத்திற்குள்!

உறக்கம் விழிப்பு

இரண்டையும்

பிரதானமாகக் கொண்டுதான்

இயங்குகிறது இப்பூவுலகம்!

நான் உன்னை மட்டுமே

மையமாகக் கொண்டு

இயங்கிக்கொண்டிருக்கிறேன்!

என் உலகம் நீயாக

சுழன்றுகொண்டிருக்கிறாய்

நான் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்

உன்னால்!

— சித்ராதேவி,சென்னை.






      Dinamalar
      Follow us