sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கயவர்கள் என்று தெரிந்தும்...

ஓட்டு திருடர்களே

சீக்கிரம் வாருங்கள்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு

காத்துக் கிடக்கிறது!

காத்துக் கிடக்கிறோம்

காத்துக் கிடக்கிறோம்

திருடர்கள் எப்போது

கதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!

முன்பு திருடர்களுக்கு பயந்து

கதவை மூடுவோம்...

இன்று

திருடர்கள் வருகைக்காக

காத்துக் கிடக்கிறோம்!

தெரியாமல் வரும் திருடனை

அடித்து விரட்டுகிறோம்...

தெரிந்தே வரும் திருடனுக்கு

ஆரத்தி எடுக்கிறோம்!

ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு

ஐந்து ஆண்டு நாட்டை

அடகு வைக்க காத்து கிடக்கிறோம்!

வழி விடுங்கள் வழி விடுங்கள்

காவலரின் துணையோடு

கயவர்கள் வருகின்றனர்

வழி விடுங்கள்!

கயவர்கள் என்று தெரிந்தும்

கதவை திறந்து விட

தேர்தல் வந்தாச்சு!

மை.சுந்தரமூர்த்தி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us