PUBLISHED ON : ஏப் 07, 2019

அ நிறம் | அளவு
கயவர்கள் என்று தெரிந்தும்...
ஓட்டு திருடர்களே
சீக்கிரம் வாருங்கள்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு
காத்துக் கிடக்கிறது!
காத்துக் கிடக்கிறோம்
காத்துக் கிடக்கிறோம்
திருடர்கள் எப்போது
கதவை தட்டுவர் என்ற ஏக்கத்தில்!
முன்பு திருடர்களுக்கு பயந்து
கதவை மூடுவோம்...
இன்று
திருடர்கள் வருகைக்காக
காத்துக் கிடக்கிறோம்!
தெரியாமல் வரும் திருடனை
அடித்து விரட்டுகிறோம்...
தெரிந்தே வரும் திருடனுக்கு
ஆரத்தி எடுக்கிறோம்!
ஐந்து நாள் பணத்திற்கு ஆசைப்பட்டு
ஐந்து ஆண்டு நாட்டை
அடகு வைக்க காத்து கிடக்கிறோம்!
வழி விடுங்கள் வழி விடுங்கள்
காவலரின் துணையோடு
கயவர்கள் வருகின்றனர்
வழி விடுங்கள்!
கயவர்கள் என்று தெரிந்தும்
கதவை திறந்து விட
தேர்தல் வந்தாச்சு!
மை.சுந்தரமூர்த்தி, புதுச்சேரி.
