sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஆக 28, 2011

Google News

PUBLISHED ON : ஆக 28, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்வை மாறினால் போதுமே!

* வருத்தத்தைப் போக்க

வழியா இல்லை...

பிரச்னைகள்

யாருக்கு இல்லை!

* அவை —

நிழலாய் தொடரும்

நிதர்சனம்!

* பயப்படுத்தும்

பல்வேறு விஷயங்களை

பட்டியலிட்டால்...

பிரதான இடத்தைப்

பிடிப்பது பிரச்னை!

* பிரச்னைகள்

வாழ்க்கைக்கு

வருத்தம் தருவனவல்ல...

அர்த்தம் தருவன!

* உப்பு —

ஒரு துளி குறைந்தால் கூட

உணவு சுவைப்பதில்லை...

பிரச்னை இல்லாவிட்டால்

வாழ்வதில்

பெருமை என்ன இருக்கிறது!

* பிரச்னைகளை

பிரச்னைகளாகப் பார்ப்பதை விடுத்து

அவற்றை­

சவால்களாய் சந்திப்போம்!

* சவால்களை

யாராவது

பிரச்னைகளாய் நினைப்பரா?

* பயம் —

ஒரு மாயக் கண்ணாடி

அது —

மனதில் இருக்கிறவரை

உண்மை நிலையை

உணர முடியாது!

* பயத்தைத் தூக்கி எறிந்து

பார்வையில்

மாற்றம் நிகழ்த்தினால்...

பார்க்கப்படும் பொருள்

தானே மாறும்!

— பத்மநாபன், காரமடை.






      Dinamalar
      Follow us