sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 25, 2011

Google News

PUBLISHED ON : செப் 25, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீ என் லட்சியம்...

* யாசகன் போல

கையேந்தி நிற்கிறேன்...

அதற்காகவேனும் என்னை சம்மதி!

* புரியாத தரை நிலவாய்

வீசத் தெரியாத தென்றலாய்

பூக்களுக்கு இடம் கொடாத பூமியாய்

நீ வலம் வருகையில்

விக்கித்து அழுகிறேன்...

உன் மீதான அன்பை

தாங்க முடியாமல்...

* என் பிரியத்தை இறக்கி வைக்க

பரந்து விரிந்த ஒரு உள்ளம் தேவை

கண்ட இதயத்திலெல்லாம் போட்டு வைக்க

என் காதல் ஒன்றும்

சூப்பி எறியப்பட்ட பனங்கொட்டையல்ல!

* உடல் முழுக்க நாணம் சுமந்து

பார்த்தும் பாராமல்

நீ போகும் ஒவ்வொரு நிமிடமும்

வேர்த்து விறு விறுத்து

சித்தமே கலங்கிப் போகிறதெனக்கு!

* உனக்கு வேண்டுமானால்

நிராகரித்தல் என்பது

சட்டை பொத்தானை மாட்டுவது போன்று

எளிதானதாக இருக்கலாம்

அது எனக்கு

நரக நெருப்பு சிந்தும்

அக்னி ஜுவாலை மாதிரியான ஒன்று!

* சோற்றில் கல் கிடந்தால்

எடுத்து வீசிவிட்டு சாப்பிடும்

பழக்கம் போலத்தான் - உன்

எதிரான அணுகுமுறையையும் அனுசரித்து

உன் பின்னால் சுற்றுகிறேன்!

* தன்னம்பிக்கையென்ற

அந்த ஒப்பற்ற கண்ணாடியின் மேல்

குண்டு விழுந்து விடக் கூடாது

ஏனெனில் —

ஒவ்வொருத்தருக்குள்ளும் இருக்கிற

லட்சிய வெறி நீர்த்து போகுமே!

* நீ என் லட்சியம்!

* ஆகவே தான் சொல்கிறேன்

என்னை நீ சம்மதி

அதுவே எனக்கு வெகுமதி!

— அதிரை.இளையசாகுல், துபாய்.






      Dinamalar
      Follow us