
ஒரு நாளாவது...
* நினைவுப் பேழை
- அது ஒரு
நெருப்புப் பெட்டகம்!
* உ<ள்ளத்தில்
ஓளிந்து ஓடும்
திராவக நதி!
* உருக்கிக் கொண்டேயிருக்கும்
ஒருவித எரிமலை!
* நினைவுப் பேழையில்
நிறைந்திருப்பது
பெரும்பாலும்
நிராசை மட்டுமே!
* ஒடுக்கப்பட்ட ஆசைகள்,
உயிரோடு
புதைக்கப்பட்ட ஜீவசமாதி
நினைவுகள்!
* வெல்லப்படாதவையும்
வெறுக்கப்பட வேண்டியவையும்
உள்ளக்குவியலாய்
உட்கார்ந்திருக்கின்றன!
* நினைவுப் பேழையில்
எந்த மூலையிலும்
இடம்பெறாமல் போய் விடுகிறது
நல்லதும், நன்றியும்!
* சுத்தங்களை எரித்துச்
சுவைத்துவிடும் மனதுக்கு
அசுத்தங்கள் மீது
அப்படி என்ன ஒரு அக்கறை?
* தின்ற சாக்லெட்டின்
காகித கவசம்,
தீர்ந்த நூல்கட்டைத்
தாங்கிய குழல்,
உதிர்ந்த பூவின்
ஒற்றை இதழ் சருகு,
இப்படி —
பயன்படாதவற்றைப்
பாதுக்காக்கும்
குழந்தையின் பாங்கு
பிறவியிலிருந்தே பிடித்துக் கொண்டதா?
* குப்பைகளைப் போற்றுவதில்
குழந்தையாய் இருக்கிறோம்...
குணத்தில்
ஒரு நாளாவது...
— வளர்கவி, கோவை.

