PUBLISHED ON : மார் 11, 2012

அ நிறம் | அளவு
களவாடிய கள்ளா....
* உளவு பார்த்து
உள்ளே வந்தாய்...
உள்ளத்தைக்
களவாடினாய்!
* கனவுகளில்
முத்தமிட்டு...
காமக் கள்
கனிய வைத்தாய்!
* நனவுகளில்
சீண்டாதிருந்து...
கனவுகளில்
தீயாக்கினாய்!
* காதற் கள்
சுவையளித்து
பேதையுள்
போதையாக்கினாய்!
* நெஞ்சுக்குள்
தீப்பிடித்தும்
கைப்பிடிக்கத்
தாமதிக்கிறாய்!
* காதல் வரம்
கேட்டிருந்தாய்...
வசிப்பதற்கோ
காக்க வைக்கிறாய்!
* கண்ணனாக
லீலையாடி...
கள்வனாக
காணாமல் போகிறாய்!
* களவாடியவனே...
கன்னி பெண்
காதற் கள்ளனே...
பொறுத்தது போதுமடா...
பொறுப்பாகக்
கைப்பிடியடா!
— பி.கீர்த்தனா, சென்னை.
