sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 18, 2012

Google News

PUBLISHED ON : மார் 18, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவலைகள் தின்னத் தகுமோ?

* உலக வாழ்க்கை

மகிழ்ந்து களிக்கவா...

கவலைகளில்

வாடித் துடிக்கவா?

* வாழ்க்கை போடும்

சிக்கல் முடிச்சுகள்,

கவலைப்படுவதால்

கழன்று கொள்ளாது!

* எல்லா மனிதரையும்

எதிர் கொள்கிறது

போராட்டங்கள்...

பண ரீதியாய்,

பண்பாட்டு ரீதியாய்,

சொந்தபந்தங்கள் பின்னும்

சூழ்ச்சி வலைகளால்!

* கவலைப்படுவது

நேரத்தை மட்டுமா வீணடிக்கிறது...

தேகத்தையுமல்லவா நோகடிக்கிறது!

* கவலைகள் தீர்வல்ல...

பிரச்னைகளைத் தீர்ப்பதைவிட்டு,

கவலைகள்...

அது பற்றியவனைத் தீர்த்து விடுகிறது!

* கவலைகள்

உயிர்மேயும் வெள்ளாடு...

உடலரிக்கும் கறையான்!

* கவலைகள்

முக அழகை மூர்க்கமாக்குகிறது...

சுமூகத்தை சுட்டெரிக்கிறது

கையாலாகாதவன் என்ற

அவப்பெயரை அளிக்கிறது!

* கவலைப்படுபவர்களை

உலகம்

உதாரண புருஷராக்குவதில்லை...

ஒதுக்கி விடுகிறது!

* கவலை வெள்ளாடு

மேயாமல் காக்கும்

வேலி ஒன்று உண்டு...

கவலைக் கறையானைக்

கருவறுக்கும் மருந்து

கைவசம் உண்டு!

* வெண்ணையை

கையில் வைத்துக் கொண்டு

வேதனைப்படுவானேன்...

கவலை எரிக்கும் நெருப்பு

வாழ்வு காக்கும் கவசம்

வேறென்ன -

சிரிப்பு மட்டும்தானே?

வளர்கவி, கோவை.






      Dinamalar
      Follow us